வேலைச்சந்தைக்கான நுழைவாயில்

எந்த தேசிய இனத்தைச் சேர்ந்தவர் என்பதிலும் எதற்காக இந்நாட்டிற்குள் வந்தவர் என்பதைப் பொறுத்தும் சுவிஸில் வேலை செய்யவோ சொந்த நிறுவனம் தொடங்கவோ முடியும். எப்படியாயினும் வேலை செய்பவர்கள் சமூகக்காப்புறுதிகளையும் வரிகளையும் செலுத்த வேண்டும்.

வேலைக்கு அனுமதி

வேலைக்கு அனுமதி பற்றிய கேள்விக்குப் பதில் வதிவிட அனுமதி கிடைக்கும் போதே தெரிந்துவிடும். சாதாரணமாக சுவிஸில் வதிவிட உரிமை பெற்றவர்கள் வேலை செய்யலாம். வழக்கமாக வேலை வழங்குபவர் தான் அனுமதிக்கு விண்ணப்பிப்பார். ஏதாவது சந்தேகங்களிருப்பின் கீழுள்ள ஏதாவது நிலையங்களில் உதவி பெறலாம். இந்த நிலையங்கள் சுவிஸில் இன்னும் குடியிருப்புக்கு வராமல் இங்கு வந்து வேலை செய்ய விரும்புபவர்களுக்கும் ஆலோசனை கொடுக்கும்.அகதி அந்தஸ்துப் பெற்றவர்களுக்கும் (B காட்) அகதி அந்தஸ்து ஏற்கப்பட்டோ அல்லது ஏற்கப்படாமலோ தற்காலிக வதிவிட அனுமதி (F காட்) பெற்றவர்களுக்கும் 2019 தொடக்கம் விசேட அனுமதி தேவையில்லை. ஒவ்வொரு வேலையின் தொடக்கத்திலும் முடிவிலும் உத்தியோகபூர்வ படிவமூலம் மாநிலத்திற்கு அறிவிக்க வேண்டும் (பதிவு நடைமுறை /Meldeverfahren). வேலை செய்யும் இடத்து மாநிலமே இதற்குப் பொறுபாகும். இந்த பதிவு இலவசமானது. அகதி அந்தஸ்துத் தேடுபவர்களுக்கு (N காட்) தொடர்ந்தும் அனுமதிப் பத்திரம் தேவை.

சொந்த நிறுவனம்

சுவிஸில் யாராவது சொந்த நிறுவனம் தொடங்க வேண்டுமாயின் அது அவரது தேசிய இனத்திலும் வதிவிட அனுமதி நிலையிலும்; தங்கியுள்ளது. EU/EFTA - நாட்டவர்களும், நிரந்தர வதிவிட அனுமதி C பெற்றவர்களும் இலகுவாக சொந்த நிறுவனம் தொடங்கலாம். மாநில குடிவரவு உள்வாங்கல் தினைக்களம் (Amt für Migration und Integration) வேறு நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்களும் சொந்த நிறுவனம் தொடங்கலாம் என்பது பற்றி அறியத்தருகிறது. மாநிலத்தின் நடைமுறைவிதிமுறைகள் (Standortförderung, Aargau Services); நடைமுறைச் செயலாக்கத்திற்கு உதவிசெய்யும்.

அனுமதி பெறாத வேலை

வேலை அனுமதிப்பத்திரமின்றி சமூகக்காப்புறுதிகளுக்குப் பதியாமல் வருமானத்திற்குரிய வரியைக் கட்டாமல் வேலை செய்தால் தண்டணைக்குரிய குற்றமாகும். இதை அனுமதி பெறாத வேலை (Schwarzarbeit) என்பர். அனுமதி பெறாத வேலை செய்தால் சட்டப்படியான பின் விளைவுகளை வேலை வழங்குபவரும் வேலை செய்பவரும் அடையவேண்டியிருக்கும். மேலும் வேலை செய்பவர் விபத்தைச் சந்தித்தாலும் காப்புறுதி இல்லை முதியோர் ஓய்வூதியக்கொடுப்பனவும் கிடையாது. வேலைவழங்குபவர் சரியான முறையில் செய்யவில்லையெனக் கருதினால் இலவச சட்ட ஆலோசனை நிலையத்தை (Rechtsberatungsstelle) நாடலாம்.

இளைஞர்கள்

அடிப்படையில் 15 வயதையடைந்த இளைஞர்கள் வேலை செய்யலாம். இலேசான வேலைகளைக் குறைந்த காலத்திற்கு (உ+மாக விடுமுறை வேலை) செய்வதற்கு அனுமதிக்கப்படும். பெற்றோரும் வேலை வழங்குபவர்களும் இளைஞர்களிற்கு அதிக நெருக்கடி கொடுக்காமல் இருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். 18 வயது வரையுள்ள இளைஞர்களுக்குப் பிரத்தியேகத் தொழிற்சட்ட விதிமுறைகளுள்ளன.