பாலியல் வன்முறை

பாலியல் வன்முறை எல்லா இடங்களிலும் நிகழ்கிறது: பொது இடங்களில், வேலை செய்யும் இடங்களில், இணையத்தில் மட்டும் இன்றி உறவு முறை மற்றும் குடும்பத்தில் கூட. பலாத்காரத்திற்குப் பிறகு காவல்துறையில் புகார் செய்ய விரும்பாவிட்டாலும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

பாலியல் வன்முறை என்றால் என்ன?

பாலியல் வன்முறை என்பது ஒருவர் மீது திணிக்கப்படும் அல்லது கட்டாயப்படுத்தப்படும் பாலியல் தொடர்புடைய செயல்கள். எடுத்துக்காட்டாக: பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் வன்கொடுமை, பாலியல் வற்புறுத்தல், குழந்தை பருவத்தினரிடம் பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் தீண்டல்/சுரண்டல் அல்லது கற்பழிப்பு. இணையத்திலும் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. எடுத்துக்காட்டாக, உங்களுடன் இணைந்து வாழ்வோரின் நெருக்கமான படம் அல்லது புகைப்படப் பதிவுகள் சமூக ஊடகங்களில் அனுமதியின்றி விநியோகிக்கப்பட்டால்.

பாலியல் வன்கொடுமை அனைத்து சமூக வகுப்புகளிலும், வயதுக் குழுக்களிலும் நிகழ்கிறது. மேலும் யார் வேண்டுமானாலும் இதைச் சந்திக்க நேரிடலாம். சுவிட்சர்லாந்தில் பாலியல் வன்முறை தடைசெய்யப்பட்டு தண்டிக்கப்படுகிறது.

அறிய வேண்டியவை

பெரும்பாலான பாலியல் குற்றங்கள் அந்நியர்களால் செய்யப்படுவதில்லை ஆனால் நம்முடன் ஜோடியாக இணைந்து வாழ்வோர், முன்னாள் ஜோடியாக இணைந்து வாழ்ந்தோர், தெரிந்தவர்கள் மற்றும் சக ஊழியர்களால் செய்யப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வெட்கப்படுகிறார்கள் மற்றும் குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்படுகிறார்கள். உதவி பெற தைரியம் வேண்டும். இருப்பினும், கற்பழிப்புக்குப் பிறகு, மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். பின்னர் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம்.

எங்கே உதவி பெறலாம்?

நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் பாலியல் வன்முறையை அனுபவித்திருந்தால்:

மருத்துவப் பரிசோதனை, முடிந்தால் 72 மணி நேரத்திற்குள் மருத்துவ பரிசோதனை செய்யுங்கள்.

மகளிர் மருத்துவமனை, ஆராவ் கன்டோனல் மருத்துவமனை +41 62 838 50 74, Haus 8, Tellstrasse 25, Aarau

அவசர சிகிச்சைப் பிரிவு, ஆராவ் கன்டோனல் மருத்துவமனை
+41 62 838 41 41, Haus 1, Tellstrasse 25, Aarau

குழந்தைகள் மருத்துவமனை, ஆராவ் கன்டோனல் மருத்துவமனை
+41 62 838 49 41, Haus 9, Tellstrasse 25, Aarau

ஆதாரங்களைப் பாதுகாத்தல்

  • நீங்கள் உடனடியாக ஒரு குடும்ப மருத்துவர் அலுவலகத்திற்கு அல்லது மருத்துவமனைக்குச் செல்ல முடியாவிட்டால், ஒரு காகிதப் பையில் ஆடை போன்ற ஆதாரங்களை வைத்திருங்கள்.
  • ஆன்லைன் உரையாடல் வரலாறுகள் மற்றும் குறுஞ்செய்திகளும் ஆதாரமாகச் செயல்படலாம். இந்தத் தரவுகளைக் காப்புப் பிரதி எடுக்கவும்.


கூடுதல் ஆதரவு

  • ஆர்காவ் பாதிக்கப்பட்டோர் ஆலோசனை மையம் சட்ட மற்றும் உளவியல் உதவியை வழங்குகிறது.
  • குற்றவியல் புகாரைத் தாக்கல் செய்வதன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய தகவல்களையும் இது வழங்குகிறது.
  • நீங்கள் புகாரைத் தாக்கல் செய்தாலும் செய்யாவிட்டாலும், காப்புச் சிகிச்சைக்கான செலவுகள் பாதிக்கப்பட்டோர் ஆதரவால் ஏற்றுக் கொள்ளப்படும்.
  • தொடர்புக்கு: பாதிக்கப்பட்டோர் ஆலோசனை மையம் ஆர்காவ், 062 835 47 90 அல்லது ஆன்லைன் உரையாடல், www.opferberatung-ag.ch